- ஈரோடு
- செந்தில்குமார்
- பட்டத்தரசியம்மன் கோவில் வீதி, சத்தியமங்கலம் ராஜன் நகர், ஈரோடு மாவட்டம்
- தின மலர்
ஈரோடு, ஏப். 6: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ராஜன் நகர் பட்டதரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). டிராக்டர் டிரைவர். நேற்று பசுவபாளையத்தில் உள்ள பேப்பர் மில்லிற்கு வேலைக்கு சென்றார். செந்தில்குமார் அந்த மில்லின் பாத்ரூமிற்கு சென்றபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த சக ஊழியர்கள் செந்தில்குமாரை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் செந்தில்குமாரை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பாத்ரூமில் மயங்கி விழுந்த டிராக்டர் டிரைவர் பலி appeared first on Dinakaran.
