×

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

மதுரை, ஏப். 6: மதுரை அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார்(50). இவர் மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் துர்கா(23) என்பவரை அணுகி, அவருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய துர்கா, பல்ேவறு தவணைகளாக ரூ.11 லட்சம் வரை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியதுபோல் அரசு வேலை வாங்கித்தரவில்லை. இதனையடுத்து துர்கா, தான் கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு கேட்டுள்ளார். அப்போது, முத்துக்குமார் ரூ.3.50 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார். ஆனால், மீதமுள்ள ரூ.7.50 லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.. இதுகுறித்து துர்கா தரப்பில் கே.புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்தப்புகாரின் பேரில் முத்துக்குமார், அவரது மனைவி பிரபா, மகன் ஹரி மற்றும் மருமகன் சுரேந்தர் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். தொடர் விசாரணை நடந்துவருகிறது.

The post அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Muthukumar ,S. Kodikulam Thanalakshmi town ,Subramaniapuram, Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...