- ஜெயங்கொண்டம்
- அரியலூர் மாவட்டம்
- ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
- மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டிகள்
- தின மலர்
ஜெயங்கொண்டம், ஏப். 6: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம் சார்ந்த மார்ச் மாத போட்டிகள் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பாக வட்டார அளவில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். வானவில் மன்றம் கண்காட்சி போட்டியினை வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ் , ராசாத்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி துவங்கி வைத்தார்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன், ஆசிரிய பயிற்றுநர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுநர் ஐயப்பன் வரவேற்றார்.
போட்டிகளின் நடுவர்களாக புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன், உதயநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அறிவுச்செல்வன், உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராமலிங்கம், ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பிரகாஷ் , வானவில் மன்றம் கருத்தாளர்கள் சதீஷ்குமார், கௌசல்யா ஆகியோர் செயல்பட்டனர்.வானவில் மன்றம் சார்ந்த அறிவியல் கண்காட்சி போட்டியில் மார்ச் மாதத்திற்கான அன்றாட வாழ்வில் ஒளியியல் என்ற தலைப்பில் அரசு மேல்நிலை , உயர்நிலை, நடுநிலை சார்ந்த 11 பள்ளிகளில் இருந்து 30 மாணவ மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
கல்லாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷிணி, த.குடிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெயலட்சுமி, புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் பிரதாப், ஜெயங்கொண்டம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி அமுதா, சுண்டிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் அஸ்விந்த், மேலகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் பிரபாகரன் ஆகியோர் வட்டார அளவில் வெற்றி பெற்று அரியலூரில் நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.ஆசிரியர் பயிற்றுநர் டேவிட் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.
The post வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் appeared first on Dinakaran.