×

மது பதுக்கிய பெண் கைது

சங்கரன்கோவில், ஏப்.6: சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சேர்ந்த கந்தசாமியின் மனைவி ராமலட்சுமி (40). இவர் கண்டிகைப்பேரி வீட்டருகே மதுபானத்தை பதுக்கிவைத்திருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அங்கு சென்ற கரிவலம்வந்தநல்லூர் போலீசார் அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராமலட்சுமியை கைது செய்தனர்.

The post மது பதுக்கிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,Ramalakshmi ,Kandasamy ,Kandikaipperi ,
× RELATED சங்கரன்கோவிலில் வணிகர் தின விழா