×

தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

பேரவையில் கேள்வி நேரத்தின்போது சிவகங்கை செந்தில்நாதன் (அதிமுக), கோவில்பட்டி கடம்பூர் ராஜு (அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பதில் வருமாறு: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும் என மொத்தம் 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை தொகுதியிலும் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

துணை மின் நிலையம், புதிய மின்மாற்றிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகின்ற பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் வைத்திருக்கும் விவசாயிகளில் மின் இணைப்பு கேட்டு ஏற்கெனவே லட்சக்கணக்கானோர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே காத்திருக்கும் நான்கரை லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

The post தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Senthilepalaji ,Minister of State ,Senthilbalaji ,Sivaganga Senthilnathan ,Adhynakhaka ,Govilbatti Kadampur Raju ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...