- ஜனாதிபதி
- அன்னம்பரணி ராமதாஸ்
- சேலம் மாவட்டம் வாலாப்பாடி
- சேலம்
- சேலம் மாவட்டம் வாவப்பாடி
- PAMAKA
- சேலம் மாவட்டம்
- வாவப்பாடி
- பம்பகாடி பம்பாடி
- அண்ணாமணி ராமதாஸ்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நின்றிருந்த மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பேருந்து நிலையம் முன்புள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றிவிட்டு பின்னர் தொண்டர்களிடையே பேசுவதற்காக அருகே உள்ள சிறிய மேடையில் ஏறி நின்றார். அப்பொழுது அங்குள்ள நிர்வாகிகள் மேடையேறி அன்புமணி ராமதாஸுக்கு மாலை அணிவித்து அவரை வரவேற்றனர்.
பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபொழுது தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறிய மேடை திடீரென சரிந்து விழுந்தது. மேடை சரிந்ததால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனடியாக கீழே குதித்தார். மேடை சரிந்ததால், மேடையின் மீதிருந்த சில நிர்வாகிகள் கீழே விழுந்தனர். நிர்வாகிகள் கீழே விழுந்ததில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக தொண்டர்கள் ஏற்பாடு செய்த மற்றொரு மேசையின் மீது நின்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களிடையே உரையாற்றினார். தொண்டர்களிடையே பேசுவதற்காக அன்புமணி ராமதாஸ் ஏறிய மேடை சரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நின்றிருந்த மேடை சரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.