×

திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது: கமல்ஹாசன் எச்சரிக்கை

சென்னை: திமுக பவள விழா பொதுக் கூட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்துரை: தீண்டாமை எனும் கொள்ளை நோய்க்கும், ஆதிக்கம் எனும் தொற்று நோய்க்கும், ஏற்றத் தாழ்வு எனும் புற்றுநோய்க்கும் 75 வருடங்களாகத் திமுக தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறது. திமுக என்றால் என்ன? ஒரே வரியில் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டால், ‘தமிழுக்கும், தமிழருக்கும் உண்டான பங்கையும், மரியாதையையும் வேற்று சக்திகள் கெடுக்க முனைந்தால், தடுக்கப்பாய்ந்து வரும் தமிழரின் கேடயம்’ என்பேன். மு.க.ஸ்டாலின் கைகளில் திமுக மென்மேலும் மெருகு கூடி, இந்திய நாடெங்கும் திராவிடச் சிந்தனைகள் பொலிகின்றன. ஆபத்தான சித்தாந்தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கத் துடிக்கையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, மாநிலத் தன்னாட்சியைப் பாதுகாக்க ஒரு கோட்டைச் சுவர் போல எழுந்து நிற்கும் இயக்கம்தான் திமுக. இந்தக் கோட்டை இங்கிருக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கலைக் கூட எவரும் எடுத்துச் செல்ல முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது: கமல்ஹாசன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,Kamal Haasan ,Chennai ,Makkal Neeti ,Maiyam ,President ,DMK Coral Festival General Meeting ,
× RELATED விண்ணும், மண்ணும் இருக்கும்வரை திமுக...