×

மாப்பிள்ளை பிடிக்காததால் பெண் தற்கொலை

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சூரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வனிதா (45). இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் ஹேமலதாவுக்கும்(28) விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் மாப்பிள்ளையை ஹேமலதாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.  தனது உறவினர்களிடம் மாப்பிள்ளை எனக்கு பிடிக்கவில்லை என ஹேமலதா கூறி வருத்தப்பட்டதாகவும் தெரிகிறது.இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் ஹேமலதா கிடந்தார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்….

The post மாப்பிள்ளை பிடிக்காததால் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Panruti ,Vanitha ,Surakuppam ,Cuddalore district ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு