×

கோயில் குளத்தில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர், தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், திருநின்றவூர் பேரூராட்சி  துப்புரவு ஊழியர். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இவரது மனைவி பொன்னி (50). இவர்களுக்கு குமுதவல்லி என்ற மகளும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பொன்னி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, மகன் பாலாஜி அவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். இருந்தபோதிலும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று மதியம் திருநின்றவூர், ராமர் கோயில் குளத்தில் பொன்னி, சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.இதனைப்பார்த்த மக்கள் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதன் பிறகு, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதோடு மட்டுமல்லாமல், போலீசார் பொன்னியின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கோயில் குளத்தில் பெண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Nagaraj ,Dharmaraja Koil Street, Tiruninnavur ,Tiruninavur ,
× RELATED ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.50...