×

அதிமுக ஆட்சி குறித்த கேள்வி செல்லூர் ராஜூ ‘டென்ஷன்’

மதுரை: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க குழு அமைக்க வலியுறுத்தி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார். பின்பு அவர் அவர் அளித்த பேட்டியில்,”மதுரை சாலைகளை சீரமைக்க ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்க வேண்டும். மதுரையில் அரசு மருத்துவமனை, முக்கிய சந்திப்புகள், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகளில், அமைக்கப்படும் தடுப்பு சுவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. மதுரையில் உயர்மட்ட பாலம் கட்டுவதை வரவேற்கிறேன்’’ என்றார். அப்போது நிருபர்கள், ‘‘அதிமுக ஆட்சிக்காலத்தில்தானே நீங்கள் குறிப்பிட்டுள்ள  பகுதிகள் முழுவதும் சாலையின் நடுவே தடுப்பு சுவர் ஏற்படுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்துறையின் அமைச்சராக இருந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?’’ என கேட்டனர். அதற்கு பதில் கூற முடியாமல், ‘‘நாங்கள் போடவில்லை….’’ என மழுப்பலாக பதில் கூறியபடி, கோபத்துடன் கிளம்பிச் சென்றார்….

The post அதிமுக ஆட்சி குறித்த கேள்வி செல்லூர் ராஜூ ‘டென்ஷன்’ appeared first on Dinakaran.

Tags : Sellore Raju ,Madurai ,Minister ,Chellore Raju ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை