×

4 திருமணத்தை மறைத்து 5வது திருமணம் செய்ய ஏற்பாடு-போலீஸ்காரர் மீது 4வது மனைவி புகார்

திருமலை : ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக அப்பலராஜூ என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பத்மா என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, அப்பலராஜூ பத்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பத்மாவிற்கு அப்பலராஜூ நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து, அப்பலராஜூ குறித்து பத்மா விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்திருப்பது தெரிந்தது. மேலும், 5 குழந்தைகள் இருப்பதும் தன்ைன ஏமாற்றி 4வதாக திருமணம் செய்ததும் தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பத்மா, அப்பலராஜூடன் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில், தற்போது காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவரை திருணம் செய்ய அப்பலராஜூ தயாரானார். இதுகுறித்து, தகவலறிந்த பத்மா பத்மா மீது திஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஏற்கனவே 3 மனைவிகள் அப்பலராஜுவுக்கு உள்ளனர். அவர் ஒவ்வொருவரையும் ஏமாற்றி திருமணம் செய்து வந்துள்ளார். அதேபோல், என்னை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். எனக்கு இதுவரை 4 முறை கருக்கலைப்பு செய்தார். இந்த சந்தேகத்தால் அவரை பற்றி விசாரித்ததில் மேற்கண்ட தகவல்கள் எனக்கு கிடைத்தது. எனவே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வரும் அப்பலராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெதரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post 4 திருமணத்தை மறைத்து 5வது திருமணம் செய்ய ஏற்பாடு-போலீஸ்காரர் மீது 4வது மனைவி புகார் appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Apalaraju ,Visakhapatnam ,Andhra State ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...