×

பெண் பஞ்.தலைவரை ஆபாசமாக பேசிய விவகாரம்: கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு

தர்மபுரி: தர்மபுரி அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவரை ஆபாசமாக பேசிய விவகாரத்தால், கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தர்மபுரி அருகே முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சியில், காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தலைவர் சுமதிகாளியப்பன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே, ஊராட்சி மன்ற தலைவரை, வார்டு உறுப்பினர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் செல்போன் மூலம் பேசி, சமூக வளைதளங்களில் பரப்பி வருவது பற்றியும், வளர்ச்சி திட்ட பணிகளை செய்ய விடாமல் தடுக்கும் விவகாரம் குறித்தும், கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களிடைய கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், கிராம சபை கூட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தள்ளி சென்றது. பின்னர், மீண்டும் கூட்டம் தொடங்கி, பிற்பகல் 2.30 மணிவரை நடந்தது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த 18 மாதங்களாக முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவரின் தூண்டுதலால், எவ்வித வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது. அந்த வார்டு உறுப்பினர், பெண் ஊராட்சி மன்ற தலைவரை, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகளால் பேசி, தினசரி சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். இதுகுறித்து கலெக்டர் தனி கவனம் செலுத்தி, ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமலும், ஆபாச வார்த்தைகளால் பேசி வரும் வார்டு உறுப்பினரை சஸ்பென்ட் செய்து, சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்….

The post பெண் பஞ்.தலைவரை ஆபாசமாக பேசிய விவகாரம்: கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.

Tags : Panj ,council ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு