×

மத்திய அரசின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும்: குஷ்பு பேச்சு

பல்லாவரம்: பொழிச்சலூர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பாஜ நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு, பாஜ மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது. பிரதமர் மோடி ஆட்சியில், ஒரு தந்தை போல், சகோதரர் போல், நண்பர் போல் ஒவ்வொரு வீட்டிற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்கிறார். கடந்த 7 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு மட்டும் சுமார் ரூ.6 லட்சம் கோடி திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மோடி ஆட்சியில், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும். குடிநீர் வழங்கும் ஜல்தன் யோஜனா திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க ஆயுஸ்மா திட்டம் உள்பட பல திட்டங்கள் வழங்கப்படுகின்றன.வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜ, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் எளிதில் உங்கள் வீடு தேடி வரும். பாஜ சார்பில் இந்தப் பகுதிக்கு ஒரு மிகச் சிறந்த நபரை தேர்ந்து எடுத்துள்ளோம். நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் போல இல்லாமல், வரும் உள்ளாட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் எந்த ஏரியாவுக்கு யார் வர வேண்டும் என அடித்தட்டு மக்கள் முடிவு செய்வார்கள். இந்த தேர்தலில் பாஜ, அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போதுதான், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் எளிதில் உங்கள் வீடு தேடி வரும் என்றார்….

The post மத்திய அரசின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும்: குஷ்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,BJP ,Khushbu ,Pozhichalur bus station ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை