×

குடும்பத்தினரை ஒரே அறையில் பூட்டி கைவரிசை இளநீர் வியாபாரி வீட்டில் 3பவுன், ₹2 லட்சம் கொள்ளை வடலூரில் துணிகரம்

வடலூர், மார்ச் 17: வடலூரில் ஒரே அறையில் குடும்பத்தினரை வைத்து பூட்டுப்போட்டு விட்டு பீரோவில் இருந்த 3 பவுன், ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இளநீர் வியாபாரி. இவரது மனைவி தனலட்சுமி (38). இவர்கள், தங்களது குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஒரே அறையில் தூங்கி உள்ளனர். வீட்டின் வெளிப்புற கேட்டை பூட்டாமல் விட்டதாக தெரிகிறது. நேற்று அதிகாலை 1 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பீரோவை உடைத்த சத்தம் கேட்டு தூங்கியவர்கள் கதவை தட்டி அலறினர். அதற்குள் கொள்ளை கும்பல் பீரோவில் இருந்த 3 பவுன், ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் தப்பினர். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து அவர்களை மீட்டனர். தகவலறிந்த வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் ஆண்டர்சன் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக வடலூர் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Vadalore Venture ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுப்பு