×

போலி இன்ஸ்டாகிராமை துவங்கி பெண்ணின் ஆபாச போட்டோ பதிவேற்றம் செய்து மிரட்டல் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கோவை:  கோவையில் இளம்பெண் பெயரில் போலி இன்ஸ்டாகிராமை துவங்கி ஆபாச போட்டோ பதிவேற்றம் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் சமூக வலைதளமான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது பெயரை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் போலி இன்ஸ்டாகிராமை துவக்கி உள்ளார். மேலும் இளம்பெண்ணின் தோழிகள் மற்றும் உறவினர்களுடன் இளம்பெண் போன்று சாட்டிங் செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அந்த மர்ம நபர் இளம்பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படங்களை எடுத்து அதனை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்துள்ளார். இதையறிந்த இளம்பெண் அந்த நபரை இன்ஸ்டா பக்கத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Instagram ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்