×

குடியாத்தத்தில் துணிகரம்: மளிகை கடையில் திருட்டு

குடியாத்தம் மார்ச் 15: குடியாத்தத்தில் மளிகைக்கடையில் புகுந்து பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் போஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜோதி(45), அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஜோதியை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது, கடையில் இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த ரூ.5 ஆயிரத்தை காணவில்லை.

மேலும், கடையில் விற்பனைக்காக வைத்திருந்த முந்திரி, திராட்சை உட்பட ரூ.10 ஆயிரம் மதிப்பு மளிகைப்பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் யாரோ கடையின் சிமென்ட் மேற்கூரையை உடைத்து, உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED ஊராட்சி செயலாளர், மனைவி மீது ரூ.20.43 லட்சம் சொத்து குவிப்பு வழக்கு