×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் பெரம்பலூர் மாவட்டத்தில் 7,235 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-1 பொ துத் தேர்வு. 34 மையங்க ளில் 7,235 பேர் தேர்வெழு தினர். 107 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழக அளவில் பிளஸ்-1 எனப்படும் பதினொன்றாம் வகுப்பிற்கு அரசுப் பொதுத் தேர்வு 14ஆம்தேதி தொடங் கி ஏப்ரல் 5 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. பெரம்ப லூர் மாவட்டத்தில், 40 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 2 ஆதிதிராவிடர் நலப் பள்ளி கள், 1அரசு மாதிரிப் பள்ளி, 4 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 12 சுயநிதிப் பள் ளிகள்,21மெட்ரிக்பள்ளிகள் என மொத்தம் 80 பள்ளிக ளைச்சேர்ந்த பிளஸ்-1 மா ணவ, மாணவியரும், தனி த்தேர்வர்களும் என 3,728 மாணவர்களும், 3,614 மா ணவிகளும் எனமொத்தம் 7,342 பேர்கள் தேர்வெழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட் டது. இதில் நேரடி தேர்வர்க ளுக்காக 33 பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கான பெரம்பலூர், எளம்பலூர் சா லையிலுள்ள உப்போடை ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் என 34 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருந்தன.

நேற்று நடைபெற்ற முதல் நாள் தேர்வில் 3,658 மாண வர்கள், 3,577 மாணவிகள் என மொத்தம் 7,235 பேர் கலந்துகொண்டு தேர்வெ ழுதினர். முதல்நாள் தேர்வுக்கு 70 மாணவர்கள், 37 மாணவிகள் எனமொத்தம் 107 பேர் தேர்வெழுத வரவில் லை. தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுப் பொதுதேர்வு நடைபெறும் தேர்வு மையங் களில் நடக்கக்கூடிய காப் பியடித்தல் உள்ளிட்ட ஒழுங் கீன செயல்களில் ஈடுபடு வோரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பெரம் பலூர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழ கன், மாவட்டக் கல்வி அலு வலர்(மேல்நிலை) (பொறு ப்பு) வேலு, மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார்) சண்மு க சுந்தரம், பெரம்பலூர் மா வட்ட அரசுப் பொதுத் தேர்வு களுக்கான கண்காணிப்பு அலுவலரான தஞ்சை சரஸ் வதி மஹால் நிர்வாக அலுவலர் முத்தையா, பெரம்பலூர் மாவட்ட அரசுத்தேர்வுத்துறை உதவி இயக்குநர் கல்பனா ராத் ஆகிய 4பேர் தலைமையில் பறக்கும் ப டைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் அதிரடியாக சோதனையிடப்பட்டன.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Perambalur district ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...