ஆலங்குடி,மார்ச் 14: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடி கிராமம் கலிபுல்லா நகர் காலனியில் அமைந்துள்ளது செல்வகணபதி கோயில். இக்கோயில் திருப்பணிகள் தொடங்க ஊர் பொதுமக்கள் பெரியோர்கள் ஆலோசனைத்து கடந்த இரண்டு தினங்களாக சிறப்பு ஹோமங்கள் செய்து பாலாலய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதற்கான பூமி பூஜை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் ஊரில் உள்ள அனைத்து பெண்களும் மஞ்சள் நீர் கொண்டு கோயில் அமையும் இடத்தை நன்னீராட்ட சிவாசாரியார்கள் மந்திரம் முழங்க செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி, ஒன்றிய குழு கவுன்சிலர் பிரகதா ரத்தினவேல், திமுக மாவட்ட பொது குழு உறுப்பினர் தலைவர் நாராயணன், கல்லாலங்குடி ஊராட்சி சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.