×

17 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

பாலக்காடு:  பாலக்காடு மாவட்ட அரசு பேருந்து நிலையத்தில் 17.4 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் ஆந்திராவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு ரேஞ்சு காவலர்கள் அரசு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் பயணிகளின் உடமைகளை சோதனை மேற்கொண்டிருந்தனர்.அப்போது மங்களூரூவிலிருந்து பாலக்காட்டிற்கு வந்த அரசு விரைவு பேருந்திலிருந்து இறங்கிய நபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக பஸ் நிலையம் அருகே நின்றுள்ளார்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் இவரது உடமைகளை சோதனை செய்ததில் 8 பாக்கெட்டுகளில் மொத்தம் 17.4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர்.  விசாரணையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் முசுணூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாயிபாபா நகரை சேர்ந்த பசகடகோபால் (எ) கோபால்கிருஷ்ணா என தெரியவந்தது.  இவர் ஆந்திராவிலிருந்து கேரளாவில் உள்ள சில்லறை வியாபாரிகளிடம் விற்பதற்காக கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த கலால்த்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கோபால் கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ