×

ஆவுடையார்கோவிலில் ரேஷன் கடையில் முறைகேடு விற்பனையாளருக்கு வலை

புதுக்கோட்டை: ஆவுடையார் கோயில் அருகே ரேஷன் கடையில் முறைகேடு நடந்த சம்பவம் தொடர்பாக விற்பனையாளரை வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அமரடக்கி நியாய விலை அங்காடியை ஆவுடையார்கோவில் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணிபுரிந்த விற்பனையாளர் குழந்தைசாமி என்பவர் இருப்பில் இருக்க வேண்டிய பொது விநியோக, திட்ட பொருட்களான பச்சரிசி 256 கிலோ, சர்க்கரை 67 கிலோ, கோதுமை 288 கிலோ, துவரம் பருப்பு 53, கிலோ பாமாயில் 37, கிலோ இருப்பு எனகுறைவாக இருந்துள்ளது.  இந்த முறைகேட்டில் அங்கு பணிபுரிந்த விற்பனையாளர் குழந்தைசாமி என்பவர் ஈடுபட்டதால் அவர் மீது கூட்டுறவு துறை துணை பதிவாளர் கோபால் அளித்த புகாரை அடுத்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை வழக்கு பதிவு செய்து குழந்தைசாமியை தேடி வருகின்றனர். கறம்பக்குடி அருகே

Tags : Auduyarkovil ,
× RELATED ஆவுடையார்கோவில் அருகே மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்