ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா தலைமை வகித்தார். நிர்வாகி ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி வரவேற்றார். மாணவர்களின் ஆலோசகர் முனைவர் காசிநாத துரை வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிவேல் ராஜன் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் சைபர் கிரைம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திவாகர், மாணவர்களுக்கு சைபர் கிரைம் பாதிப்புகளில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதை காட்சிகள் மூலம் விளக்கினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துணை முதல்வர் மற்றும் பெண்கள் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மகிமா நன்றியுரை வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.
