×

வடமாநிலத்தினருடன் ஹோலி கொண்டாட்டம்

குமாரபாளையம்: குமாரபாளையம் நகரில் தங்கி, பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடினர்.  பல்வேறு இடங்களில் தங்கியுள்ள இந்த தொழிலாளர்கள் பலரை, காவல் நிலையம் அருகே திரட்டிய இன்ஸ்பெக்டர் ரவி, பணி செய்யும் இடத்தில் ஏதும் அச்சுறுத்தல் உள்ளதா என கேட்டறிந்தார். தங்களை வேற்று மாநிலத்தவராக யாரும் நினைப்பதில்லை எனவும், குடியிருப்பு பகுதியிலும், பணி செய்யும் இடங்களிலும் எந்த விதமான அச்சுறுத்தல்களும் இல்லையெனவும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்பாத வடமாநில தொழிலாளர்கள் பலர், உள்ளூரிலேயே கொண்டாடுவதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசாரும் வண்ண பொடிகளை தூவி வடமாநில தொழிலாளர்களுடன் மகிழ்ச்சியாக ஹோலி கொண்டாடினர்.

Tags : Holi ,Northerners ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!