×

ரூ.48.50 லட்சத்தில் புதிய வகுப்பறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

ஆறுமுகநேரி, மார்ச் 9: காயல்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட அலியார் தெருவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு கூடுதல் வகுப்பறை கட்டக்கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதேபோல் காயல்பட்டினம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20.5 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா, நேற்று காலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் துணை கலெக்டர் தாக்ரே சுபஞானதேவ்ராவ், திருச்செந்தூர் ஆர்டிஓ புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன், ஆர்டிஓ பொங்கலரசி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் பாஸ்கரன், இம்மானுவேல், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஆணையாளர் குமார்சிங், முக்காணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடைசுகு, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, நகர்மன்ற துணை தலைவர் சுல்தான்லெப்பை, நகர துணை செயலாளர் முகமது நவ்பல், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மெஜல்லா பீரிஸ், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் புனிதா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...