×

கூட்டுறவு வங்கி தகவல் விவசாயிக்கு 4 வாரத்தில் கடன் வழங்கப்படும் மனு முடித்து வைப்பு

மதுரை: விவசாயிக்கு 4 வாரத்தில் கடன் வழங்கப்படும்  என கூட்டுறவு வங்கித் தரப்பில் கூறப்பட்டதால் மனு முடித்து வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், நிலமழகியமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். இதுவரை விவசாய கடன் வழங்கவில்லை. தகுதியான விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கடன் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். கூட்டுறவு வங்கித் தரப்பில், மனுதாரருக்கு 4 வாரத்தில் கடன் வழங்கப்படும் என கூறப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, மனுவை முடித்து வைத்தார்.

Tags :
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்