×

கீழப்பழூர் ஊராட்சியில் ரூ.2.32 கோடியில் நகர, ஊரமைப்பு அலுவலகம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் ஊராட்சியில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பழூர் ஊராட்சியில் கீழப்பழூர் காவல் நிலையம் அருகே பொதுப்பணித்துறை (கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) த்துறை சார்பில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று அடிக்கல் நாட்டினார். ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த கட்டிடத்தில், தரைத்தளம் 2453 சதுர அடியில் உதவி இயக்குநர் அறை, வரவேற்பு அறை, அலுவலக அறை, நகல் எடுக்கும் இயந்திர அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

மேலும், முதல் தளம் 2453 சதுர அடியில் அலுவலக அறை, பதிவறை, சேமிப்பு அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைப்படவுள்ளது. பொதுமக்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக 365 சதுர அடியில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடமும், 355 சதுர அடியில் இருச்சக்கர வாகனம் நிறுத்திமிடமும் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்ற்கு கொண்டுவர அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (பொ.ப) மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் அட்ஷயா, திருமானூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, தாசில்தார் கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Urban Planning Office ,Geezapapur Panchayat ,
× RELATED மதுரையில் ரூ5 கோடியில் கட்டப்பட்டுள்ள...