×

₹13 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற பிஎஸ்எப் வீரர்

கைதுதேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே வேலை வாங்கி தருவதாக ₹13லட்சம் ஏமாற்றிய, ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி சாலை தேவராஜ் தெருவைச் சேர்ந்தவர் பழனி (52). ஓய்வு பெற்ற பி.எஸ்.எப்., வீரர். இவர் அஞ்செட்டி அருகே, காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த செவத்தான் (53) என்ற கூலி தொழிலாளியின் மகன் ரங்கனுக்கு, கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடந்த 2020ம் ஆண்டு ₹13 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் செவத்தான் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய பழனி, செவத்தானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக, அஞ்செட்டி போலீசில் செவத்தான் கொடுத்த புகாரின் பேரில், பழனியை போலீசார் கைது செய்தனர்.


Tags : BSF ,
× RELATED இந்திய – வங்கதேச எல்லையில்...