×

கல்லூரி மாணவன் போக்சோவில் கைது

மோகனூர், மார்ச் 5: மோகனூரில் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை ஓசூரில் மீட்ட தனிப்படை போலீசார், அவரை கடத்திய கல்லூரி மாணவரை போக்சோவில் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த லத்துவாடியைச் சேர்ந்த லாரி டிரைவரின் 15 வயது மகள், அணியாபுரம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 18ம்தேதி, மாணவி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் மகளை லத்துவாடி அரசு கல்லூரியில் பயிலும் தர்மபுரி அனுமந்தபுரத்தை சேர்ந்த முனுசாமி மகன் மனோஜ்குமார் (22) என்பவர், தங்களது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து கலெக்டர் மற்றும் எஸ்பியிடமும் புகார் அளித்தனர். இதனையடுத்து மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்த போலீசார், பல்வேறு சிம்கார்டுகளை வாங்கி, மாற்றி மாற்றி போட்டு  பயன்படுத்தி வந்த மனோஜ்குமார், சமூக ஊடகத்தில் பதிவுகளை செய்து வந்தார். இந்நிலையில், ஓசூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மனோஜ்குமார் மற்றும் மாணவியை, போலீசார் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து மனோஜ்குமாரை போக்சோவில் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட மாணவியை மீட்டு நாமக்கல் காப்பகத்தில் சேர்த்தனர்.

Tags : Pocso ,
× RELATED பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டுகள்...