×

தா.பழூர் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

தா.பழூர், மார்ச் 2: தா.பழூர் அருகே தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் செல்வராஜ் (45). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 27ம் தேதி தா.பழூர் கடைவீதியில் பொருட்கள் வாங்கிகொண்டு டூவீலரில் வாழைக்குறிச்சி நோக்கி சென்றார்.

அப்போது தா.பழூர்-கும்பகோணம் சாலையிலிருந்து வாழைக்குறிச்சி செல்லும் சாலையில் திரும்பும்போது, இருட்டாக இருந்ததால் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது டூவீலர் மோதியதில் செல்வராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து செல்வராஜ் மனைவி சந்தோசம் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் எஸ்ஐ வேல்முருகன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Tha.Phaur ,
× RELATED தா.பழூர் கீழ மைக்கேல்பட்டி தேவாலயத்தில் மாடுகளுக்கு புனித நீர் தெளிப்பு