×

நத்தம் அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிப்பு

நத்தம், பிப். 28: நத்தம் அருகே செந்துறை முடிமலை ஆறு கிராம பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 2 மணிநேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவியின் மூலம் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர்.

Tags : Natham ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...