×

உழவன் செயலியை பயன்படுத்தி

அரியலூர்: அரியலூர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு, அரியலூர் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடையில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். அறுவடை நேரத்தில் அறுவடைக்கு கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இம்மாதிரியான வேலை ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசானது ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள் மூலம் விளைந்த பயிர்களை அறுவடை செய்யும் போது உரிய நேரத்தில் அறுவடை செய்வது மட்டுமின்றி அறுவடையின் போது ஏற்பட கூடிய மகசூல் இழப்பினை வெகுவாக குறைக்க முடியும்.

அறுவடை இயந்திரங்களுக்காக சில நேரங்களில் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தள்ளப்பட்டு தரகு கொடுத்து அறுவடை செலவு அதிகமாவதுடன் மொத்த வருமானமும் குறைகிறது. அரியலூர் மாவட்ட கலெக்டரின் ஏற்பாட்டின்படி இந்த பிரச்னையை தீர்க்க வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அறுவடை இயந்திரங்களை நேரடியாக உரிமையாளர்களிடமிருந்து பெற உரிமையாளர் பெயர், விலாசம் கைப்பேசி எண்ணுடன் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக உழவன் செயலியின் மூலம் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு என்ற முகப்பை தேர்வு செய்து அறுவடை எந்திரங்கள் பற்றி அறிய என்ற துணை முகப்பின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை இயந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பாடாலூர் செல்போன் கடையில் திருட்டு