×

குளித்தலை ரயில்வே கேட் அருகே அரளி விதை சாப்பிட்ட பெண் பலி

குளித்தலை, பிப். 26: குளித்தலை ரயில்வே கேட் அருகே அரளி விதை சாப்பிட்ட பெண் பலியானார். கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ மனைவி பழனியம்மாள் (42). இவருக்கு 2 மகள், 2 மகன் உள்ளனர். பழனியம்மாளுக்கு கடந்த ஓராண்டாக வயிற்று வலி ஏற்பட்டு, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பழனியம்மாளுக்கு வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால், மனம் உடைந்து அரளி விதையை சாப்பிட்டு குளித்தலை ரயில்வே கேட் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதை அறிந்த அவரின் உறவினர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 11 மணிக்கு அவர் இறந்து போனார். இதுகுறித்து பழனியம்மாளின் மகள் மாரியம்மாள் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மல்லிகை செடிகளின் மேல்பகுதியில் முதிர்ச்சியடைந்த தலைகளை அகற்றிவிட்டு, அந்த செடிகளை கட்டி வைத்து விடுகின்றனர்.

Tags : Kuluthalai ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு