×

திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்களுக்கு தர்ம அடி


திருவெண்ணெய்நல்லூர், பிப்.25: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி(54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட் உடைப்பதுபோல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது இரு வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்றுகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருவெண்ணெய்நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த  ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த உதயா (26) என்பதும், வீட்டின் பூட்டை உடைத்து திருட வந்ததையும் ஒப்புக்கொண்டனர். பைக்கை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Thiruvenneynallur ,
× RELATED தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது