×

தூத்துக்குடி அருகே பஞ். ஊழியரை கத்தியால் வெட்டிய 2 ரவுடிகள் கைது

தூத்துக்குடி, பிப். 23: புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி தெற்குத்தெருவை சேர்ந்தவர்  வெங்கடேசன் (43), குமாரகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் கூட்டாம்புளி பகுதி  பம்ப் ஆபரேட்டராக உள்ளார். நேற்று  முன்தினம் இரவு கூட்டாம்புளி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் இல்லை என்றதால் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் வெங்கடேசன்  காயமடைந்தார். இதுகுறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொ) ராமலட்சுமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த சுடலைமுத்து மகன் மாதேஸ்வரன் (22), திரு.வி.க., நகரை சேர்ந்த வேல்சாமி மகன் காளியப்பன் (27) ஆகிய இருவரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட மாதேஸ்வரன் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 12 வழக்குகளும், காளியப்பன் மீது 21 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Panj ,Tuticorin ,
× RELATED காதலியின் கணவனை கொன்ற அதிமுக பஞ்.தலைவர்