×

திருவாடானை அருகே சேதமடைந்த கண்மாய் கலிங்கை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை அருகே சேதமடைந்த கண்மாய் கலிங்கை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருவாடானை அருகே உள்ள விளத்தூர் கிராமத்தில் பெரிய பாசன கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் 110 ஏக்கர் பாசன வசதி கொண்ட பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கண்மாய் கலிங்கு, மடை போன்றவைகள் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  

இதனால் இவைகள் அனைத்தும் இடிந்து பழுதாகி விட்டது. அதிலும் கலிங்கு பகுதி முழுவதும் இடிந்த நிலையில் உள்ளது. இந்த கண்மாயில் மூன்று மடைகள் உள்ளநிலையில் அதில் 2 மடைகள் இடிந்து போய் கிடக்கிறது. இதனால் மழை பெய்தாலும் போதிய தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.
தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த கண்மாயை ஆய்வு செய்து இடிந்து போன கலிங்கு,மடை ஆகியவற்றை சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Thiruvadana ,
× RELATED வாகனங்களின் டயரை பஞ்சராக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை