×

கோவை சரவணம்பட்டியில் ரூ.11.50 லட்சம் செல்போன் டவர் மாயம்

கோவை, பிப். 22: கோவை சரவணம்பட்டியில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான செல்போன் டவர் மாயமானது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் தனியார் கட்டிடங்கள் மற்றும் காலி நிலங்களில் வாடகை அடிப்படையில் பிரபல செல்போன் நிறுவனங்களில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், சென்னையில் செயல்பட்டு வரும் தலைமை அலுவலக கண்காணிப்பில் கோவை சரவணம்பட்டி அத்திபாளையம் பிரிவில் செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த செல்போன் டவரின் சேவைகள் கிடைக்காமல் முடக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து நிறுவன அதிகாரிகள் கோவை சரவணம்பட்டியில் பொருத்தப்பட்டிருந்த செல்போன் டவரை ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அங்கிருந்த ரூ.11 லட்சத்து 48 ஆயிரத்து 324 மதிப்பிலான செல்போன் டவர் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மாயமாகியிருந்தன. மர்ம நபர்கள் சிறிது, சிறிதாக அதனை திருடி சென்று விற்பனை செய்துள்ளனர். இது குறித்து நிறுவனத்தின் தரப்பில், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் செல்போன் டவர் உதிரிபாகங்கள் அடிக்கடி திருடு போவது தொடர் கதையாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Saravanampatti ,Coimbatore ,
× RELATED காதலனுடன் கருத்து வேறுபாடு 4வது...