×

கட்டிமேடு அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவியப்போட்டி மற்றும் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் நேரு வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில், ஓவியம் என்பது புள்ளிகள் கோடுகள் வளைவுகளால் இணைந்த வெளிப்பரப்பு என்றார்.

மேலும் ஓவிய காட்சிகள் மனதால் ஆக்கிரமிக்கப்படுபவை என்று குறிப்பிட்டார். இக்கண்காட்சியில் மாணவர்களுடைய பென்சில், பேனா வரைபடங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், உருவப்பட ஓவியம் போன்ற அறிய படைப்புகள் இடம் பெற்றிருந்தன.  ஓவிய கண்காட்சியை அனைத்து மாணவ, மாணவிகளும் பார்வையிட்டனர்.  நிகழ்ச்சியில் முடிவில் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஓவிய ஆசிரியை பவித்ரா நன்றி கூறினார்.

Tags : Katimedu Government School ,
× RELATED கட்டிமேடு அரசு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு பாராட்டு சான்றிதழ்