×

டேக்வாண்டோ போட்டியில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வெற்றி

கரூர்: பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான டேக்வாண்டோ போட்டியில் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிதாசன் பல்கலைக் கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான டேக் வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமான கல்லூரிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில், கரூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவி சினேகா தங்கப்பதக்கத்தையும், மாணவர்கள் தமிழ்ச்செல்வன், சுபாஷ் ஆகியோர் தங்கப்பதக்கத்தையும், மாணவர் கவின்குமார் மற்றும் பாலகணேஷ் ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றனர். மேலும், ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை, கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.

Tags : Govt Arts College ,
× RELATED ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...