×

தாராசுரம், முள்ளுக்குடி, குறிச்சி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கும்பகோணம், பிப்.21: தாராசுரம் துணை மின் நிலையத்தில் இன்று (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள் கோவில், சோழன்மாளிகை, முழையூர், திருவலஞ்சுழி, அம்மாபேட்டை, புதுப்படையூர், மணப்படையூர், தென்னூர், பம்பப்படையூர், கீழப்பழையாறை, தேனாம்படுகை, உடையாளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குறிச்சி, கீழக்காட்டூர், காகிதப்பட்டறை, பந்தநல்லூர், கோணுலாம்பள்ளம், கொல்லுமாங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூர், பட்டவெளி, கீழமணக்குடி, கயலூர், திருக்கோடிக்காவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் மாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tarasuram ,Mullukudi ,Kuchi ,
× RELATED கடலோர பகுதியில் சோதனையை தீவிர படுத்த கோரிக்கை