×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐடிஐயில் நேரடியாக சேர இன்று கடைசி

நாகப்பட்டினம், செப்.30: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக நேரடிச் சேர்க்கை இன்று (30ம் தேதி) நிறைவு பெறுகிறது. எனவே 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற மாணவ, மாணவிகள் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர அந்தந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று சேர்க்கை விவரங்களை உறுதி செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல் அறிய 04365-250129 மற்றும் 04369-276060 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : ITI ,Nagapattinam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்