×

ராஜபாளையம் நிதிநிறுவனத்தில் கொள்ளை முயற்சி: ரூ.3 கோடி தங்க நகைகள் தப்பின

ராஜபாளையம், செப். 24: ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ரூ.3 கோடி மதிப்பிலான தங்கநகைகள் தப்பின. ராஜபாளையத்தில் உள்ள தென்காசி சாலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி எதிரே தனியார் நிதிநிறுவனம் மற்றும் அடகு கடை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நிதிநிறுவனத்தில் கொள்ளையடிக்க, வெல்டிங் மெஷின் மூலம், இரும்பு கதவை உடைக்கும் முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது நிதி நிறுவனத்தில் இருந்த எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனால், மர்மநபர்கள் ஓடிவிட்டனர். நிதிநிறுவனத்தில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் தப்பின. இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி பதிவுகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!