×

கஞ்சா வழக்கில் தலைமறைவானவர் கைது

திண்டுக்கல் பழனி பைபாஸ் ரோடு கொட்டபட்டி பிரிவு அருகே உள்ள கூரியர் அலுவலகத்தில் கஞ்சா வைத்திருந்ததாக மணிகண்டன் (வயது 25),செல்வ மருதநாயகம் (25), விஜயகுரு (30), தீபக் (21), இசக்கி பாண்டி (20) ஆகிய 5 பேரை கடந்த 19ந் தேதி தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சீலப்பாடியைச் சேர்ந்த மதுரைவீரன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் செட்டியபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரைவீரன் என்பதும் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Absconder ,
× RELATED கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது