பீளமேடு, செப்.20: கோவை காளப்பட்டி சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடையில் குட்கா விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அந்த மளிகைக்கடையில் இருந்து 6 கிலோ 500 கிராம் எடையுள்ள குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை கைப்பற்றி பறிமுதல் செய்த பீளமேடு போலீசார், இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன் குமார் (34) உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.