×

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடி,செப்.10: தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். மழை காலம் நெருங்குவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி மாநகராட்சி டூவிபுரம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு  குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் சாரு முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி  குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் ரூபன் சுரேஸ் பொன்னையா, நகர் நல அலுவலர் அருண்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், சுகாதார அலுவலர் ஸ்டேன்லி பாக்கியநாதன், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், நிர்வாகிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayor ,Jagan Periyasamy ,Thoothukudi Municipal Corporation School ,
× RELATED திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து...