×

கறம்பக்குடி அம்புக்கோவில் சாலை வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச்சு அன்று

கறம்பக்குடி, செப்.10: தினகரன் செய்தி எதிரொலியாக கறம்பக்குடி ரெகுநாதபுரம் சாலை அம்புக்கோவில் கிராமத்தில் உள்ள வேக தடைக்கு உடனடியாக வெள்ளை வர்ணம் பூசி நெடுஞ்சாலை துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமம் அமைந்துள்ளது இக்கிராமத்தில் உள்ள சிவன் கோயில் எதிரே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே நீண்ட நாட்களாக அமைக்கப்பட்ட வேகத்தடை அமைந்துள்ளது. பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட இந்த வேகத்தடையில் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை வர்ணம் பூசாமல் இருந்ததன் காரணமாக கறம்பக்குடிக்கு மற்றும் கந்தர்வக்கோட்டை ரெகுநாதபுரத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன் விபத்து ஒன்று ஏற்பட்டு உயிர் பிழைத்த சம்பவமும் நடந்தேறியது. இதன் காரணமாக அம்புக்கோவில் கிராமத்தில் உள்ள அனைத்து தரப்பு பொது மக்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இது தொடர்பாக நேற்று தினகரன் நாளிதழில் இது தொடர்பாக செய்தி வெளி வந்தது. இதனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று செய்தி வெளி வந்தவுடன் வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் உடனடியாக பூசினர். கறம்பக்குடி ரெகுநாதபுரம் சாலையில் உள்ள அம்புக்கோவில் கிராமத்தில் உள்ள அனைத்து வேக தடைக்கும் வெள்ளை வர்ணம் பூசிய நெடுஞ்சாலை துறைக்கும், திமுக அரசுக்கும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதளுக்கும் பொது மக்கள் ,வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Karambakudi ,Ambukovil ,
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை