×

புளியம்பட்டி அருகே ரூ.2 கோடியில் ஆலந்தா அணை புனரமைப்பு பணி

ஓட்டப்பிடாரம், செப். 7: ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட வைகுண்டம் தாலுகா, ஆலந்தா பகுதியில் பொதுப்பணித்துறையின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அணை சீரமைத்தல், தலைமதகுகளை மறு கட்டுமானம் செய்தல், கரை பலப்படுத்துதல் தலைமதகு பகுதியில் இருந்து சம்பன்குளம் வரையிலான 5 கி.மீ தூரத்திற்கான நீர்வரத்து கால்வாய் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்து பேசுகையில், இத்திட்டத்தின் மூலம் சம்பாகுளம், உழக்குடி குளம், கலியாவூர் குளம்  உள்ளிட்ட 4 குளங்கள் மூலம் 341.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுவதுடன் 5 வழியோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும், என்றார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் ரகுபதி கணேஷ், கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர்கள் ராமசாமி, சுரேஷ் காந்தி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Alanta Dam ,Puliambatti ,
× RELATED புஞ்சை புளியம்பட்டியில் தரமற்ற மக்காச்சோள விதையால் விளைச்சல் பாதிப்பு