×

தா.பழூர் அருகே தெருநாய்கள் கடித்ததில் பெண் காயம்

தா.பழூர், செப்.3: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி நடு தெருவை சேர்ந்தவர் கருப்பையன் அவரது மனைவி மல்லிகா (55). இவர் நேற்று முன்தினம் காலை அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள காட்டு பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக சென்று உள்ளார். அப்போது, கூட்டமாக வந்த 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து தனியாக சென்ற மல்லிகாவை கடித்து குதறியது. இதனால் மல்லிகா சத்தம் போட்டு கதறி அழுதுள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் ஓடிவந்து மல்லிகாவை நாய்கள் கூட்டத்திடம் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் நாய்களால் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஆகையால் அப்பகுதியில் உள்ள நாய்களை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Tha.Phaur. ,
× RELATED தா.பழூர் கீழ மைக்கேல்பட்டி தேவாலயத்தில் மாடுகளுக்கு புனித நீர் தெளிப்பு