சீர்காழி, செப். 3: சீர்காழி குமரன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த வீர விநாயகர் சிலை சிறப்பு அலங்காரத்துடன் வாகனத்தில் வைத்து வீதி உலா எடுத்து வரப்பட்டன. அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சீர்காழி நகராட்சி தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குழுவினர்கள், பக்தர்கள் செய்திருந்தனர் இதே நிலை நீடித்தால் கல்லூரியின் கட்டடம் பழுதடைந்து விடும். எனவே கல்லூரியை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவதுடன் எதிர்காலத்திலும் இந்த நிலை நீடிக்காமல் இருக்க வேண்டும் என கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கவனத்திற்கு கொண்டுச் சென்றோம்.