×

பாளை பெருமாள்புரத்தில் 21 சிசிடிவி கேமராக்கள்

நெல்லை, செப். 2: நெல்லை மாநகர காவல் துறை, பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமச்சந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் குற்ற சம்பவங்களை விரைந்து கண்டுபிடிக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அப்பகுதி மக்கள் நல சங்கத்தினர் சிசிடிவி கேமராக்களை அமைக்கத் திட்டமிட்டனர். அதன் பேரில் நெல்லை மாநகராட்சி 54 வது வார்டு கவுன்சிலர் கருப்புசாமி கோட்டையப்பன்  நிர்வாகிகள் ஒன்றிணைந்து 21 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வாறு புதிதாக பொருத்தப்பட்ட 21 சிசிடிவி  கேமராக்களை கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர்  சீனிவாசன்  திறந்துவைத்து  அதன் செயல்பாட்டை துவக்கிவைத்தார்.  இதில் மேலப்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் பெருமாள்புரம் பார்த்திபன் (சட்டம்- ஒழுங்கு), ஜெயலட்சுமி குற்றப்பிரிவு மற்றும் மக்கள் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Palai Perumalpuram ,
× RELATED பாளை பெருமாள்புரத்தில் பரபரப்பு...