×

கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது

நத்தம், ஆக. 26: நத்தம் அருகே லிங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜா என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த உதயகுமார் வெட்டிக்கொலை செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் உதயகுமாரை சரமாரியாக கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதன் முடிவில் உதயகுமார் கொலை தொடர்பாக லிங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதே ஊரைச்சேர்ந்த நல்லியப்பன் (58) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நத்தம் - மதுரை சாலையில் உள்ள கடவூர் அருகே பதுங்கியிருந்த நல்லியப்பனை நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, எஸ்ஐ சரவணன் உள்ளிட்ட தனிப்படையினர் கைது செய்தனர்.

Tags : Absconder ,
× RELATED கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது