×

முன்னாள் படைவீரர்களுக்கு 5ம் தேதி சிறப்பு குறைதீர் கூட்டம் தஞ்சாவூர் கலெக்டர் அழைப்பு

தஞ்சாவூர், ஆக. 3: முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணியளவில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம். முன்னாள் படைவீரர், சார்ந்தோர்கள் இரண்டு பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இக்கூட்டங்களில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...